Monday, November 06, 2006
இட ஒதுக்கீடும் ஏகலைவனும்
ஏகலைவன் ஏன் கட்டை விரலை இழந்தான் ? மஹாபாராதம் என்பது ஒரு பேச்சுக்கு உண்மை என்று கூட எடுத்துக்கொண்டாலும் , இந்த கேள்விக்கு என்ன பதில் ? துரோநாச்சாரியார் என்ற நிற வெறி பிடித்த ஆசான் தன் மாணவன் அர்ஜுன்னை விட சிறந்த வில்லாலன் என்று ஏகலைவன் பெயர் எடுத்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்தான். இது எவ்வாறு நியாயமாகும்?. எந்த நீதிப் படி தர்மமாகும். வேண்டும் என்றால் புழுத்துப்போன வேத நூல்கள் படி நேர்மையான தர்மமாக கருதப்பபடலாம். ஆனால் சுய அறிவுள்ள, எந்த தன்மானமுள்ள வீரனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தக் காலத்தில் இவ்வாறு ஏமாற்றி விட்டு இப்பொழுது இட ஒதிக்கீட்டை குறை கூறி, முதலைக் கண்ணீர் வடிக்கும் சில ஜந்துக்கள், தங்கள் முன்னோர் செய்த நற்பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும். சுதந்திரம் பெற்று 50 வருடங்கள் ஆகிவிட்டது, இன்னும் ஏன் இட ஒதுக்கீடு ?என்று கூவும் கோட்டான்கள் தங்களிடம் இருந்து இன்னும் மக்கள் முழுமையான விடுதலை பெற வில்லை என்பதை எப்போது உணர்வார்கள்?. இவர்களுக்கா தெரியாது ? இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இருந்து விட்டு , இந்த பூனையும் பீர் குடிக்கும், என்பது போலத்தான் இருப்பார்கள் இவர்களும். ஏமாந்து போகாதீர்கள் தன்மானச் சிங்கங்களே ! இவர்களுக்கு எதிரான சுதந்திர தாகம் என்றும் இருக்கட்டும்!
Subscribe to:
Posts (Atom)