Wednesday, June 25, 2008

தசாவதாரம் எனது பார்வையில்

தசாவதாரம் பற்றி எவ்வளவோ விமர்சனங்கள் வந்தபோதும், நானும் என்னுடைய பங்குக்கு எழுத கடமைபட்டுள்ளேன். கலைஞானி உலகநாயகன்,பத்மஸ்ரீ, டாக்டர், கமல்ஹாசன் நடித்தால் மட்டும் இப்படத்தை சிறந்த படம் என்று நான் கூறவில்லை.

இங்கே அவர் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பற்றி சொல்லியே ஆகவேண்டும்.நம்மில் எத்தனை பேருக்கு facial srub போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து கழுவும் பொறுமை உள்ளது? ஆனால் கமல் பத்து வேடங்களில் "makeup" போட்டது மட்டுமல்லாமல், உடல் அசைவுகளிலும், பேச்சு நடையிலும் எவ்வளவு அற்புதமாக நடித்துக் காட்டி உள்ளார். " உலக நாயகனுக்கு நிகர் உலகநாயகனே".

இங்கே நிறைய பேர் கதை இல்லை, கிராபிக்ஸ் சரி இல்லை, உலக தரம் இல்லை என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். அவர்களில் பாதி பேர் CHE TAM(il) BRAHM(in)S or SHIT TAM(il) BRAHM(in)S ஆக தான் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். சங்கமம் படத்தில் மணிவண்ணன் விஜயகுமாரிடம் சவால் விட்டுவிட்டு வருவார். அப்போது வடிவேல் மற்றும் சார்லி, காசு போச்சு, பணம் போச்சு என்று புலம்புவார்கள். அப்போது மணிவண்ணன் கூறுவார் "சோத்துக்கு பீ...நாய்களா"....அப்படி தான் இப்படத்தை குறை கூறுபவர்களையும் திட்ட வேண்டும் போல் உள்ளது.

இராமாயணத்தில் என்ன கதை? பத்து தலை கொண்ட இராவணன் சீதையை கடத்தி கொண்டு போகிறான். கொரங்கு தூது போகிறது. கடைசியில் சீதை மீட்கப்படுகிறாள். Harry Potter 'ல் என்ன கதை?. கெட்டவன் ஒரு நல்ல சிறுவனை கொல்ல எத்தனையோ சதி செய்தாலும் கடைசியில் அவன் கொல்லப்படுகிறான்.

இது போல தான் "Butterful Effect" மற்றும் "Chaos Theory" யை தமிழக ரசிகர்களுக்கு புரியும் வகையில் கமல் கொடுத்துள்ளார். கிராபிக்ஸ் தமிழக, இந்திய திரைபடங்களுக்கு ஒப்பிடுகையில் சிறந்ததே. ஆறு கோடி பேரை Base ஆக வெய்த்து, அதிலும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பவர், தமிழ் தெரிபவர் எத்தனை பேரோ? இப்படி ஒரு படம் வெளியிட்டதே சிறப்பான ஒன்றாகும்.

ஒன்றே ஒன்றை குறை கூற வேண்டுமானால் அது ஹிமேஷ் ரேச்மையாவின் இசை.

மற்றபடி கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இந்திய திரைப்படத்தை அடுத்த பரிமாணத்துக்கு எடுத்துச் செல்லும் படம்!

கலக்கீட்டீங்க கமல் !!!