சமிபத்தில் நெருங்கிய நண்பர்கள் இருவர் அளித்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒருவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். மற்றொருவர் உடுமலையைச் சேர்ந்தவர். அவர்கள் படித்த மெட்ரிக் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப்பாடங்களாக திணிக்கப்பட்டுள்ளது.
கண்டிப்பாக ஹிந்தி ஒரு பாடமாக எடுத்து பயின்றே ஆகவேண்டுமாம். ஒரு பள்ளியின் பெயர் கலைமகள் கல்வி நிலையம் , இன்னொன்று ஸ்ரீனிவாச வித்யாலய. இது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
அவர்களின் கூற்றுப்படி இது நிறைய பள்ளிகளில் இப்பொழுது வழக்கமாக இருக்கிறதாம்.
தமிழை ஒரு பாடமாக எடுத்து பயிலாமலையே தமிழ்நாட்டில் கல்லூரிப்படிப்பை முடித்து விடலாம். ஹிந்தியோ, பிரெஞ்சோ ஒரு மாற்றுப்பாடமாக எடுத்துக்கொல்லலாம்.
இவ்வாறு ஹிந்தியோ, பிரெஞ்சோ எடுத்து பயின்றால் கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்குமென கேள்விப்பட்டுருக்கிறேன் . இது பிட்ஸ் பிலானி, அல்லது REC போன்ற வெளி மாநில கல்லூரிகளில் இடம் கிடைக்க ஏதுவாக இருக்குமாம். ஆனால் என்னைப்பொருத்தவரை தமிழ் மதிப்பெண்கள்களில் எந்த குறைபாடும் வெய்க்கவில்லை.
எனக்குத் தெரிந்தவரையில் தமிழைக்கூட இன்னும் கட்டாயப்பாடமாக ஆக்கவில்லை. ஆனால் இது போன்ற பள்ளிகள் ஹிந்தியை கட்டாயப்பாடமாகக் ஆக்கியிருப்பது என்ன நியாயம்?
இந்த கூற்று உண்மையாக இருப்பின், தமிழக கல்வித்துறை என்ன பண்ணிக்கொண்டுருக்கிறது ?
மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்கு படுத்தும் வாரியம் என்ன பண்ணிக்கொண்டுருக்கிறது ?
ஹிந்தியை ஒரு பாடமாக எடுத்துப்படிப்பதில் எந்த ஆட்சேபனையுமில்லை. ஆனால் அதை ஏன் கட்டாயப்பாடமாக ஆக்கப்படவேண்டும்?
மற்றுமொரு கேள்வி, தமிழை ஏன் கட்டாயப்பாடமாக ஆக்கவில்லை? நண்பரின் கூற்றுப்படி தன் மாமா பிள்ளைகளுக்கு தமிழ் பேச மட்டும் தான் தெரிகிறதாம். எழுதவோ படிக்கவோ தெரிவதில்லை.
இவ்வாறான ஹிந்தி திணிப்பு அமைதியான முறையில் நடந்து கொண்டுள்ளது. விருப்பமிருப்பவர்கள் படித்துக்கொள்ளட்டும் . ஆனால் இந்த திணிப்பைக்கூட எதிர்க்க தமிழ்நாட்டில் ஆளில்லாமல் போய்விட்டதா? அதுவும் கலைஞரின் ஆட்சி நடந்துகொண்டிருக்கும்போது?
ஒரு மொழியை தேவை இருக்கும் பொழுது கற்றுக்கொள்ளுதல் அவசியமானதே. ஆனால் செயற்கையான தேவைகளை உண்டாக்கி அதை திணிக்கும் பொழுது கூட நாம் எதிர்க்கவில்லை என்றால் நம் கதி பிகார் மாநில மொழிகளுக்கு ஏற்பட்ட நிலைமை, கதி தான். பிகாரில் மூன்று மொழிகள் இருந்தனவாம். ஆனால் அவைகள் இப்பொழுது மைதிலி என்ற மொழியை தவிர, மற்ற மொழிகள் என்ன ஆயிற்றே என்று தெரியவில்லையாம்.
இம்மாதிரி ஒரிசா கோவா போன்ற மாநில மொழிகளும் நிறையபேருக்கு தெரிவதில்லை. அதே போல் நிறைய தெலுங்கு நண்பர்களுக்கு பேச மட்டும் தான் தெரியுமாம். எழுதவோ படிக்கவோ தெரிவதில்லை.
நமக்கும் அந்த நிலைமை வந்துவிடுமோ என்று அச்சமாக உள்ளது .
Wednesday, December 03, 2008
Monday, December 01, 2008
தமிழக வெள்ளம்
தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பிரச்சனையை முன்வைத்து பலர் பதிவு எழுதியிருப்பதை வரவேற்கிறேன். வெயில்க் காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையும், மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளமும் வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. காவேரியையும், கங்கையையும் இணைக்காவிட்டாலும் பரவாயில்லை...
ஏரிகளை தூர் வாரி, ஆக்ரமிப்புகளை அகற்றி, ஒழுங்கான வடிகால் வசதிகளை ஏற்படுத்துவது முக்கிய கடமையாக இருக்கவேண்டும். இப்படி ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்ற பிரச்சனையைப் படிப்படியாக அணுகி சரி செய்யவேண்டும். மக்கள் முதல், அரசு வரை எல்லோரும் இதில் பங்கு கொள்ள வேண்டும்.
தெருக்களைச் சுத்தமாக வெய்ப்பது முதல்....ஏரிகளை தூர் வாருதல், மற்றும் தண்ணீர் தடுப்பு அணைகள் அமைப்பது வரை...உலக வங்கியில் கடன் வாங்கலாம்....மக்களிடமே பணம் வசுளிக்கலாம் ...எவ்வளவோ வழிமுறைகள் இருக்கிறது.....ஆட்சியாளர்களும், மக்களும் தான் மனம் வெய்க்க வேண்டும்....
ஏரிகளை தூர் வாரி, ஆக்ரமிப்புகளை அகற்றி, ஒழுங்கான வடிகால் வசதிகளை ஏற்படுத்துவது முக்கிய கடமையாக இருக்கவேண்டும். இப்படி ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்ற பிரச்சனையைப் படிப்படியாக அணுகி சரி செய்யவேண்டும். மக்கள் முதல், அரசு வரை எல்லோரும் இதில் பங்கு கொள்ள வேண்டும்.
தெருக்களைச் சுத்தமாக வெய்ப்பது முதல்....ஏரிகளை தூர் வாருதல், மற்றும் தண்ணீர் தடுப்பு அணைகள் அமைப்பது வரை...உலக வங்கியில் கடன் வாங்கலாம்....மக்களிடமே பணம் வசுளிக்கலாம் ...எவ்வளவோ வழிமுறைகள் இருக்கிறது.....ஆட்சியாளர்களும், மக்களும் தான் மனம் வெய்க்க வேண்டும்....
Subscribe to:
Posts (Atom)