சமிபத்தில் நெருங்கிய நண்பர்கள் இருவர் அளித்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒருவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். மற்றொருவர் உடுமலையைச் சேர்ந்தவர். அவர்கள் படித்த மெட்ரிக் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப்பாடங்களாக திணிக்கப்பட்டுள்ளது.
கண்டிப்பாக ஹிந்தி ஒரு பாடமாக எடுத்து பயின்றே ஆகவேண்டுமாம். ஒரு பள்ளியின் பெயர் கலைமகள் கல்வி நிலையம் , இன்னொன்று ஸ்ரீனிவாச வித்யாலய. இது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
அவர்களின் கூற்றுப்படி இது நிறைய பள்ளிகளில் இப்பொழுது வழக்கமாக இருக்கிறதாம்.
தமிழை ஒரு பாடமாக எடுத்து பயிலாமலையே தமிழ்நாட்டில் கல்லூரிப்படிப்பை முடித்து விடலாம். ஹிந்தியோ, பிரெஞ்சோ ஒரு மாற்றுப்பாடமாக எடுத்துக்கொல்லலாம்.
இவ்வாறு ஹிந்தியோ, பிரெஞ்சோ எடுத்து பயின்றால் கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்குமென கேள்விப்பட்டுருக்கிறேன் . இது பிட்ஸ் பிலானி, அல்லது REC போன்ற வெளி மாநில கல்லூரிகளில் இடம் கிடைக்க ஏதுவாக இருக்குமாம். ஆனால் என்னைப்பொருத்தவரை தமிழ் மதிப்பெண்கள்களில் எந்த குறைபாடும் வெய்க்கவில்லை.
எனக்குத் தெரிந்தவரையில் தமிழைக்கூட இன்னும் கட்டாயப்பாடமாக ஆக்கவில்லை. ஆனால் இது போன்ற பள்ளிகள் ஹிந்தியை கட்டாயப்பாடமாகக் ஆக்கியிருப்பது என்ன நியாயம்?
இந்த கூற்று உண்மையாக இருப்பின், தமிழக கல்வித்துறை என்ன பண்ணிக்கொண்டுருக்கிறது ?
மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்கு படுத்தும் வாரியம் என்ன பண்ணிக்கொண்டுருக்கிறது ?
ஹிந்தியை ஒரு பாடமாக எடுத்துப்படிப்பதில் எந்த ஆட்சேபனையுமில்லை. ஆனால் அதை ஏன் கட்டாயப்பாடமாக ஆக்கப்படவேண்டும்?
மற்றுமொரு கேள்வி, தமிழை ஏன் கட்டாயப்பாடமாக ஆக்கவில்லை? நண்பரின் கூற்றுப்படி தன் மாமா பிள்ளைகளுக்கு தமிழ் பேச மட்டும் தான் தெரிகிறதாம். எழுதவோ படிக்கவோ தெரிவதில்லை.
இவ்வாறான ஹிந்தி திணிப்பு அமைதியான முறையில் நடந்து கொண்டுள்ளது. விருப்பமிருப்பவர்கள் படித்துக்கொள்ளட்டும் . ஆனால் இந்த திணிப்பைக்கூட எதிர்க்க தமிழ்நாட்டில் ஆளில்லாமல் போய்விட்டதா? அதுவும் கலைஞரின் ஆட்சி நடந்துகொண்டிருக்கும்போது?
ஒரு மொழியை தேவை இருக்கும் பொழுது கற்றுக்கொள்ளுதல் அவசியமானதே. ஆனால் செயற்கையான தேவைகளை உண்டாக்கி அதை திணிக்கும் பொழுது கூட நாம் எதிர்க்கவில்லை என்றால் நம் கதி பிகார் மாநில மொழிகளுக்கு ஏற்பட்ட நிலைமை, கதி தான். பிகாரில் மூன்று மொழிகள் இருந்தனவாம். ஆனால் அவைகள் இப்பொழுது மைதிலி என்ற மொழியை தவிர, மற்ற மொழிகள் என்ன ஆயிற்றே என்று தெரியவில்லையாம்.
இம்மாதிரி ஒரிசா கோவா போன்ற மாநில மொழிகளும் நிறையபேருக்கு தெரிவதில்லை. அதே போல் நிறைய தெலுங்கு நண்பர்களுக்கு பேச மட்டும் தான் தெரியுமாம். எழுதவோ படிக்கவோ தெரிவதில்லை.
நமக்கும் அந்த நிலைமை வந்துவிடுமோ என்று அச்சமாக உள்ளது .
Wednesday, December 03, 2008
Monday, December 01, 2008
தமிழக வெள்ளம்
தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பிரச்சனையை முன்வைத்து பலர் பதிவு எழுதியிருப்பதை வரவேற்கிறேன். வெயில்க் காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையும், மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளமும் வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. காவேரியையும், கங்கையையும் இணைக்காவிட்டாலும் பரவாயில்லை...
ஏரிகளை தூர் வாரி, ஆக்ரமிப்புகளை அகற்றி, ஒழுங்கான வடிகால் வசதிகளை ஏற்படுத்துவது முக்கிய கடமையாக இருக்கவேண்டும். இப்படி ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்ற பிரச்சனையைப் படிப்படியாக அணுகி சரி செய்யவேண்டும். மக்கள் முதல், அரசு வரை எல்லோரும் இதில் பங்கு கொள்ள வேண்டும்.
தெருக்களைச் சுத்தமாக வெய்ப்பது முதல்....ஏரிகளை தூர் வாருதல், மற்றும் தண்ணீர் தடுப்பு அணைகள் அமைப்பது வரை...உலக வங்கியில் கடன் வாங்கலாம்....மக்களிடமே பணம் வசுளிக்கலாம் ...எவ்வளவோ வழிமுறைகள் இருக்கிறது.....ஆட்சியாளர்களும், மக்களும் தான் மனம் வெய்க்க வேண்டும்....
ஏரிகளை தூர் வாரி, ஆக்ரமிப்புகளை அகற்றி, ஒழுங்கான வடிகால் வசதிகளை ஏற்படுத்துவது முக்கிய கடமையாக இருக்கவேண்டும். இப்படி ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்ற பிரச்சனையைப் படிப்படியாக அணுகி சரி செய்யவேண்டும். மக்கள் முதல், அரசு வரை எல்லோரும் இதில் பங்கு கொள்ள வேண்டும்.
தெருக்களைச் சுத்தமாக வெய்ப்பது முதல்....ஏரிகளை தூர் வாருதல், மற்றும் தண்ணீர் தடுப்பு அணைகள் அமைப்பது வரை...உலக வங்கியில் கடன் வாங்கலாம்....மக்களிடமே பணம் வசுளிக்கலாம் ...எவ்வளவோ வழிமுறைகள் இருக்கிறது.....ஆட்சியாளர்களும், மக்களும் தான் மனம் வெய்க்க வேண்டும்....
Tuesday, November 25, 2008
சூர்யா என்ற அற்புத நடிகர்
சமிபத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தைப் பார்த்தேன்.
ஆகா என்ன அற்புதமான நடிகராக மாறிவிட்டார் சூர்யா என்று நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கமலுக்கு வயதாகிவிட்டதே என்ற வருத்தத்தை போக்க சரியான நேரத்தில் நல்ல திறமைகளை வெளிபடுத்தியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
கமல் சினிமாவுக்காகவே படைக்கப்பட்ட ஒரு பிறப்பு என்றாலும், நடிப்பில் நல்ல சிஷ்யனாக தெரிகிறார் சூர்யா.
பள்ளிப்பருவ நடிப்பானாலும் சரி, கல்லூரிப் பருவ நடிப்பானாலும் சரி, காதல் பருவ நடிப்பானாலும் சரி, மகனுக்குரிய நடிப்பானாலும் சரி, தந்தைக்குரிய நடிப்பானாலும் சரி, சூர்யா அதிரவைக்கிறார்.
படத்தின் கடைசி காட்சிகளில் தந்தை சூர்யாவும் மகன் சூர்யாவும் பிரியும் காட்சி மனதை தொட்டுச் செல்கிறது. இது போல பல காட்சிகள். மகனை கல்லூரி விடுதியில் விட்டு செல்லும் காட்சியும் அதில் அடங்கும்.
மொத்தத்தில் சூர்யா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னுமொரு பொக்கிஷம்.
ஆகா என்ன அற்புதமான நடிகராக மாறிவிட்டார் சூர்யா என்று நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கமலுக்கு வயதாகிவிட்டதே என்ற வருத்தத்தை போக்க சரியான நேரத்தில் நல்ல திறமைகளை வெளிபடுத்தியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
கமல் சினிமாவுக்காகவே படைக்கப்பட்ட ஒரு பிறப்பு என்றாலும், நடிப்பில் நல்ல சிஷ்யனாக தெரிகிறார் சூர்யா.
பள்ளிப்பருவ நடிப்பானாலும் சரி, கல்லூரிப் பருவ நடிப்பானாலும் சரி, காதல் பருவ நடிப்பானாலும் சரி, மகனுக்குரிய நடிப்பானாலும் சரி, தந்தைக்குரிய நடிப்பானாலும் சரி, சூர்யா அதிரவைக்கிறார்.
படத்தின் கடைசி காட்சிகளில் தந்தை சூர்யாவும் மகன் சூர்யாவும் பிரியும் காட்சி மனதை தொட்டுச் செல்கிறது. இது போல பல காட்சிகள். மகனை கல்லூரி விடுதியில் விட்டு செல்லும் காட்சியும் அதில் அடங்கும்.
மொத்தத்தில் சூர்யா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னுமொரு பொக்கிஷம்.
Wednesday, June 25, 2008
தசாவதாரம் எனது பார்வையில்
தசாவதாரம் பற்றி எவ்வளவோ விமர்சனங்கள் வந்தபோதும், நானும் என்னுடைய பங்குக்கு எழுத கடமைபட்டுள்ளேன். கலைஞானி உலகநாயகன்,பத்மஸ்ரீ, டாக்டர், கமல்ஹாசன் நடித்தால் மட்டும் இப்படத்தை சிறந்த படம் என்று நான் கூறவில்லை.
இங்கே அவர் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பற்றி சொல்லியே ஆகவேண்டும்.நம்மில் எத்தனை பேருக்கு facial srub போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து கழுவும் பொறுமை உள்ளது? ஆனால் கமல் பத்து வேடங்களில் "makeup" போட்டது மட்டுமல்லாமல், உடல் அசைவுகளிலும், பேச்சு நடையிலும் எவ்வளவு அற்புதமாக நடித்துக் காட்டி உள்ளார். " உலக நாயகனுக்கு நிகர் உலகநாயகனே".
இங்கே நிறைய பேர் கதை இல்லை, கிராபிக்ஸ் சரி இல்லை, உலக தரம் இல்லை என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். அவர்களில் பாதி பேர் CHE TAM(il) BRAHM(in)S or SHIT TAM(il) BRAHM(in)S ஆக தான் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். சங்கமம் படத்தில் மணிவண்ணன் விஜயகுமாரிடம் சவால் விட்டுவிட்டு வருவார். அப்போது வடிவேல் மற்றும் சார்லி, காசு போச்சு, பணம் போச்சு என்று புலம்புவார்கள். அப்போது மணிவண்ணன் கூறுவார் "சோத்துக்கு பீ...நாய்களா"....அப்படி தான் இப்படத்தை குறை கூறுபவர்களையும் திட்ட வேண்டும் போல் உள்ளது.
இராமாயணத்தில் என்ன கதை? பத்து தலை கொண்ட இராவணன் சீதையை கடத்தி கொண்டு போகிறான். கொரங்கு தூது போகிறது. கடைசியில் சீதை மீட்கப்படுகிறாள். Harry Potter 'ல் என்ன கதை?. கெட்டவன் ஒரு நல்ல சிறுவனை கொல்ல எத்தனையோ சதி செய்தாலும் கடைசியில் அவன் கொல்லப்படுகிறான்.
இது போல தான் "Butterful Effect" மற்றும் "Chaos Theory" யை தமிழக ரசிகர்களுக்கு புரியும் வகையில் கமல் கொடுத்துள்ளார். கிராபிக்ஸ் தமிழக, இந்திய திரைபடங்களுக்கு ஒப்பிடுகையில் சிறந்ததே. ஆறு கோடி பேரை Base ஆக வெய்த்து, அதிலும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பவர், தமிழ் தெரிபவர் எத்தனை பேரோ? இப்படி ஒரு படம் வெளியிட்டதே சிறப்பான ஒன்றாகும்.
ஒன்றே ஒன்றை குறை கூற வேண்டுமானால் அது ஹிமேஷ் ரேச்மையாவின் இசை.
மற்றபடி கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இந்திய திரைப்படத்தை அடுத்த பரிமாணத்துக்கு எடுத்துச் செல்லும் படம்!
கலக்கீட்டீங்க கமல் !!!
இங்கே அவர் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பற்றி சொல்லியே ஆகவேண்டும்.நம்மில் எத்தனை பேருக்கு facial srub போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து கழுவும் பொறுமை உள்ளது? ஆனால் கமல் பத்து வேடங்களில் "makeup" போட்டது மட்டுமல்லாமல், உடல் அசைவுகளிலும், பேச்சு நடையிலும் எவ்வளவு அற்புதமாக நடித்துக் காட்டி உள்ளார். " உலக நாயகனுக்கு நிகர் உலகநாயகனே".
இங்கே நிறைய பேர் கதை இல்லை, கிராபிக்ஸ் சரி இல்லை, உலக தரம் இல்லை என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். அவர்களில் பாதி பேர் CHE TAM(il) BRAHM(in)S or SHIT TAM(il) BRAHM(in)S ஆக தான் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். சங்கமம் படத்தில் மணிவண்ணன் விஜயகுமாரிடம் சவால் விட்டுவிட்டு வருவார். அப்போது வடிவேல் மற்றும் சார்லி, காசு போச்சு, பணம் போச்சு என்று புலம்புவார்கள். அப்போது மணிவண்ணன் கூறுவார் "சோத்துக்கு பீ...நாய்களா"....அப்படி தான் இப்படத்தை குறை கூறுபவர்களையும் திட்ட வேண்டும் போல் உள்ளது.
இராமாயணத்தில் என்ன கதை? பத்து தலை கொண்ட இராவணன் சீதையை கடத்தி கொண்டு போகிறான். கொரங்கு தூது போகிறது. கடைசியில் சீதை மீட்கப்படுகிறாள். Harry Potter 'ல் என்ன கதை?. கெட்டவன் ஒரு நல்ல சிறுவனை கொல்ல எத்தனையோ சதி செய்தாலும் கடைசியில் அவன் கொல்லப்படுகிறான்.
இது போல தான் "Butterful Effect" மற்றும் "Chaos Theory" யை தமிழக ரசிகர்களுக்கு புரியும் வகையில் கமல் கொடுத்துள்ளார். கிராபிக்ஸ் தமிழக, இந்திய திரைபடங்களுக்கு ஒப்பிடுகையில் சிறந்ததே. ஆறு கோடி பேரை Base ஆக வெய்த்து, அதிலும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பவர், தமிழ் தெரிபவர் எத்தனை பேரோ? இப்படி ஒரு படம் வெளியிட்டதே சிறப்பான ஒன்றாகும்.
ஒன்றே ஒன்றை குறை கூற வேண்டுமானால் அது ஹிமேஷ் ரேச்மையாவின் இசை.
மற்றபடி கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இந்திய திரைப்படத்தை அடுத்த பரிமாணத்துக்கு எடுத்துச் செல்லும் படம்!
கலக்கீட்டீங்க கமல் !!!
Saturday, September 29, 2007
இந்திய அரசாங்கம் ஹிந்தியை உலக சபையில் முன்னிறுத்த உள்ளத்தை எதிர்த்து மனு
இந்திய அரசாங்கம் ஹிந்தியை உலக சபையில் முன்னிறுத்த உள்ளத்தை எதிர்த்து மனு
http://www.petitiononline.com/19652007/petition.html
http://www.petitiononline.com/19652007/petition.html
Wednesday, September 19, 2007
சேதுசமுத்திர திட்டமும், ராமாயணமும்
எல்லா தமிழர்களும் ஒன்று பட வேண்டும். ஆரிய விசப்பாம்பு, தன் கொடிய அகண்ட நாக்கினால், நம்மை கொத்தக் காத்துக் கொண்டு இருக்கிறது. நம்மையெல்லாம் போலி ராமாயண கதைகளில் வரும் சுக்கிரீவன் போலவும், வீபிசினன் போலவும் நினைத்து கொண்டு இருக்கிறது.
ராமாயணம் ஓரளவு உண்மை என்று எடுத்துக்கொண்டாலும், அது ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த யுத்தத்தின் ஆரியக் கற்பனைக் குறிப்பு, அவ்வளவே. வாலியை நேருக்கு நேர், நின்று எதிர்கொள்ள முடியாத கோழை ராமன் , ஒளிந்து நின்று முதுகுக்குப் பின்னால் குத்தினான். இதற்கு அவன் தம்பி சுக்கிரீவன் உதவினான். இதற்கு அவர்கள் கூறும் காரணம் வாலி சுக்கிரீவனின் மனைவி மீது ஆசை பட்டான் என்று.
அதே போல வீபிசினன் , ராவணன் சீதை மீது ஆசை பட்டதாகக் கூறி, தன் சொந்த அண்ணனை காட்டிக் கொடுத்ததினால் தான் ராமன் வெற்றி பெற்றதாக கதை கூறுகிறது.
ஆரியர்களின் கற்பனை எவ்வாறு வேலை செய்திருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும்.
1. திராவிட அரசர்களின் சகோதரர்களை அவர்கள் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டும்.
2. அப்படி இழுப்பதற்கு பெரிய காரணம் வேண்டும் ( மேலே கூறிய காரணங்களின் ஒற்றுமையைப் பார்த்தால் அவை எவ்வளவு போலி என்று புரியும்) .
பத்தாயிரம் பொண்டாட்டிகளுடன் குடும்பம் நடத்திய தசரதனின் மகன் ராமனை சுத்தமான ஒழுக்கமானவனாகக் காட்டி, ஒழுக்கத்துடன் வாழ்ந்த ராவணனையும் , வாலியையும் பெண் மோகம் கொண்டவர்களாக ராமாயணம் பறை சாற்றுகிறது.
வேதங்கள் என்று நம்மை பிரித்து , நாமெல்லாம் கூலி வேலை மட்டுமே செய்ய வேண்டும் , தாங்கள் தான் கல்வி கற்க தகுதியானவர்கள் என்று கூறினார்கள் (1952 ல் கூட குல கல்வி முறையை கொண்டு வந்தவர்கள் , பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்திருப்பார்கள்?). நம்மை கல்வி கற்க விடாமல், அவர்கள் எழுதிய புரட்டுகளையும் பொய்களையும் நம் மீது திணித்தார்கள்.
இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டும், தூங்கிக்கொண்டும் நாம் இருக்க முடியாது. இவர்கள் ராமாயணத்தை காட்டி சேதுசமுத்திர திட்டத்தை தடை செய்வார்களே ஆனால், நம் வரலாறு படி ராமாயணம் ஒரு புரட்டு.
நாம் இந்தியாவில் இருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போகும்.
இந்த திட்டத்தை நாம் கண்டிப்பாக நிறை வேற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இது திராவிடர்களின் மானப் பிரச்சனை.
ராமாயணம் ஓரளவு உண்மை என்று எடுத்துக்கொண்டாலும், அது ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த யுத்தத்தின் ஆரியக் கற்பனைக் குறிப்பு, அவ்வளவே. வாலியை நேருக்கு நேர், நின்று எதிர்கொள்ள முடியாத கோழை ராமன் , ஒளிந்து நின்று முதுகுக்குப் பின்னால் குத்தினான். இதற்கு அவன் தம்பி சுக்கிரீவன் உதவினான். இதற்கு அவர்கள் கூறும் காரணம் வாலி சுக்கிரீவனின் மனைவி மீது ஆசை பட்டான் என்று.
அதே போல வீபிசினன் , ராவணன் சீதை மீது ஆசை பட்டதாகக் கூறி, தன் சொந்த அண்ணனை காட்டிக் கொடுத்ததினால் தான் ராமன் வெற்றி பெற்றதாக கதை கூறுகிறது.
ஆரியர்களின் கற்பனை எவ்வாறு வேலை செய்திருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும்.
1. திராவிட அரசர்களின் சகோதரர்களை அவர்கள் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டும்.
2. அப்படி இழுப்பதற்கு பெரிய காரணம் வேண்டும் ( மேலே கூறிய காரணங்களின் ஒற்றுமையைப் பார்த்தால் அவை எவ்வளவு போலி என்று புரியும்) .
பத்தாயிரம் பொண்டாட்டிகளுடன் குடும்பம் நடத்திய தசரதனின் மகன் ராமனை சுத்தமான ஒழுக்கமானவனாகக் காட்டி, ஒழுக்கத்துடன் வாழ்ந்த ராவணனையும் , வாலியையும் பெண் மோகம் கொண்டவர்களாக ராமாயணம் பறை சாற்றுகிறது.
வேதங்கள் என்று நம்மை பிரித்து , நாமெல்லாம் கூலி வேலை மட்டுமே செய்ய வேண்டும் , தாங்கள் தான் கல்வி கற்க தகுதியானவர்கள் என்று கூறினார்கள் (1952 ல் கூட குல கல்வி முறையை கொண்டு வந்தவர்கள் , பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்திருப்பார்கள்?). நம்மை கல்வி கற்க விடாமல், அவர்கள் எழுதிய புரட்டுகளையும் பொய்களையும் நம் மீது திணித்தார்கள்.
இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டும், தூங்கிக்கொண்டும் நாம் இருக்க முடியாது. இவர்கள் ராமாயணத்தை காட்டி சேதுசமுத்திர திட்டத்தை தடை செய்வார்களே ஆனால், நம் வரலாறு படி ராமாயணம் ஒரு புரட்டு.
நாம் இந்தியாவில் இருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போகும்.
இந்த திட்டத்தை நாம் கண்டிப்பாக நிறை வேற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இது திராவிடர்களின் மானப் பிரச்சனை.
Monday, August 20, 2007
கார் ஓட்டுபவனும் டாக்டர் மகனும்
சமீபத்தில் ஒரு முன்னால் மத்திய அமைச்சரின் சகோதரர், நடத்தும் தொலைக்காட்சி ஒன்றை பார்க்க நேர்ந்ததது. அதில் ஒரு மூணரை வயது சிறுவன், அற்புதுமாக கார் ஓட்டுவதாகவும், அவன் பெரிய சாதனை படைத்து விட்டதாகவும், பல போட்டிகளில் பரிசு பெற்று இருப்பதாகவும் சொன்னார்கள். அவனை பேட்டியும் எடுத்து போட்டார்கள். அதை பார்க்க அதிர்ச்சியாகயிருந்தது . ஏனென்றால் இவ்வாறான சிறு பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது சமுதாயத்திற்கு விளைவிக்கும் கேடு. இந்த சிறு வயதில் அப்பிள்ளையிடம் என்ன தெளிவு இருக்கும்? நாளை பெற்றோர் இல்லாத சமயம் வண்டி எடுத்து கொண்டு போய் பெரிய விபத்து ஏற்பட்டால் யார் பதில் சொல்லுவது?.
இந்த விசயம் இப்படி இருக்க, பதினாறு வயதானச் சிறுவன் ஒருவன், தனது டாக்டர் பெற்றோர் முன் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்ததற்காகக் கைது செய்தார்கள். அவனது பெற்றோர்களும் கைது செய்யப்பட்டார்கள். பதினாறு வயது சிறுவன் பெற்றோர் முன் செய்த சிகிச்சை மாபெரும் குற்றமாகப் கருதப்படும் போது , மேலே கூறிய சிறுவர்களை போற்றுவது எந்த விதத்தில் நியாயம்?. படித்தவனுக்கு ஒரு நீதி என்றும், படிக்காதவனுக்கு ஒரு நீதி என்றும் இந்த விசயத்தில் நாம் நடந்து கொண்டுள்ளோம். இவ்வாறான சிறுவர்களை ஊக்கப் படுத்த வேண்டாம். என் மகன் 2 வயததில் கார் ஓட்டுகிறான் என்றும் பெருமிதமும் கொள்ளவேண்டாம். இது சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும்.
இந்த விசயம் இப்படி இருக்க, பதினாறு வயதானச் சிறுவன் ஒருவன், தனது டாக்டர் பெற்றோர் முன் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்ததற்காகக் கைது செய்தார்கள். அவனது பெற்றோர்களும் கைது செய்யப்பட்டார்கள். பதினாறு வயது சிறுவன் பெற்றோர் முன் செய்த சிகிச்சை மாபெரும் குற்றமாகப் கருதப்படும் போது , மேலே கூறிய சிறுவர்களை போற்றுவது எந்த விதத்தில் நியாயம்?. படித்தவனுக்கு ஒரு நீதி என்றும், படிக்காதவனுக்கு ஒரு நீதி என்றும் இந்த விசயத்தில் நாம் நடந்து கொண்டுள்ளோம். இவ்வாறான சிறுவர்களை ஊக்கப் படுத்த வேண்டாம். என் மகன் 2 வயததில் கார் ஓட்டுகிறான் என்றும் பெருமிதமும் கொள்ளவேண்டாம். இது சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும்.
Subscribe to:
Posts (Atom)