Saturday, October 28, 2006
சினிமா விருதுகள்
சமீபத்திய சினிமா விருதுகள் எனக்கு கொஞ்சம் கவலை அளிப்பதாகத்தான் உள்ளது. அந்நியன் போன்ற படங்களுக்கு மத்தியில் தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் காணாமல் போய் விட்டது...இதற்கு காரணம் என்னவென்று ஆராய விழைகிறேன். வெறும் பணம் ஈட்டுதல் மட்டுமே விருதுகளுக்குக் காரணமாக அமயக்கூடாது என்பது எனது விருப்பம். தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் பண அளவில் மிகப் பெரிய வெற்றி பெற இயலவில்லை என்றாலும், நிச்சயம் விருதுகளுக்குத் தகுதியானவை . அதுவும் அந்நியன் போன்ற படங்களோடு ஒப்பிடுகையில் நிச்சயம் பன்மடங்கு தகுதியானவை . அந்நியன் படம் முழுக்க முழுக்க திணிக்கப்பட்ட கருத்துக்களைக் கொண்டது . எதுவுமே இயல்பானதாகவே இல்லை. சினிமா பார்ப்பதற்கு வேண்டுமானால் பொழுது போக்காக இருக்கலாமே தவிர விருதுகள் என்று வரும் பொழுது சிறப்பான படங்களையே ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வாறான படைப்பாளிகள் நம்மிடம் இல்லாமல் போகக் கூடிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வாங்க !!! நிறைய எழுதுங்க !!!
//you are correct. Good films are not getting recognition in front of commercial films //
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
//வாங்க !!! நிறைய எழுதுங்க !!! //
vanthutten !! namathu vetri kodiya parakka vida...
Post a Comment